வாழ்க்கை என்னும் பாதை

*வாழ்க்கை எனும் பாதை...* 

     _*வாழ்க்கை பாதை*_ 
_*எல்லோருக்கும்*_ 
_*ஒரே மாதிரியானவை அல்ல,*_

_சிலர் மலர்கள் மேல்_ 
_நடக்க கூடும்._

_*சிலர் முட்கள் மேல்*_ 
_*நடக்க கூடும் .*_

_சிலர்மலர்களிலும், முட்களிலும்_ 
_நடக்க கூடும் ._

_*மலர்களில் நடந்த*_ 
_*போதிலும்*_ 
_*சில வேளைகளில்*_ 
_*அவர்களுக்கும்*_ 
_*கால்கள் வலிக்க*_ _*கூடும்.*_
_*முட்கள் என்றால் ,*_
_*உன் அடுத்த அடியில்*_
_*கவனம் கூடும்.*_

_மலர்களும் ,முட்களும்_ 
_என்றால் ,_
_எங்கே எப்படி_ 
_நடக்க வேண்டும்_ _என்ற_ 
_தெளிவு கூடும்._

_*செல்லும் பாதையில்*_  
_*பேச்சு துணைக்கு*_ 
_*சிலர் வர கூடும் .*_
_*பேசாமலும் சிலரை*_ 
_*கடக்க கூடும் .*_
_*வழி காட்ட சிலர்*_ 
_*வர கூடும்.*_
_*தவறான*_ _*வழியை காட்டவும்*_ 
_*சிலர் வர கூடும்.*_

_விழும் போது தூக்கி விட_ 
_சிலர் வர கூடும் ._
_விழும் போது_ 
_சிரிப்பதற்கும்_ 
_சிலர் வர கூடும்._
_முந்தி நடக்கையில்_ 
_முதுகுக்கு_ _பின்னால்_ 
_தட்டி குடுக்க_ 
_சிலர் வர கூடும் ._
_போக விட்டு_ 
_புறம் பேச_ 
_சிலர் வர கூடும்._

_*இளைப்பாறும் மரமாய்*_
_*சிலர் நிழல் குடுக்க கூடும் .*_
_*உன் நிழல் மட்டுமே*_ 
_*துணை என்ற*_ 
_*நிலையும் வர*_ _*கூடும்.*_
_*வழி(லி)*_ _*எதுவாயினும் ,*_
_*காணும் மனிதர் யாராயினும்*_ 
_*பாதை முடியும்*_ _*வரை*_ 
_*பயணித்தே ஆக வேண்டும் .*_

_இடையில் முடங்கி விடாதே ,_
_இயலாமல் முடித்து விடாதே ._
_முடியும் வரை_ _கால்களை_ 
_கொண்டு நடந்து_ _விடு_ 
_முடிந்தால் ஓடி விடு ._

_*முடியாமல்*_ _*முடங்கும்*_ 
_*போது ,*_ _*தன்னம்பிக்கை யை கொண்டு*_ 
_*ஒரு அடியேனும் முன்னுக்கு சென்று விடு...*_

Comments

Popular posts from this blog